Sunday, December 13, 2015 By: தென்றல் காற்று

தமிழர் தாயகத்தின் தமிழ் சினிமா

  ஈழத்துக் கலைஞர்களின் இனிய முயற்சியால் இன்றைய காலகட்டத்தில் பல வகைகளிலும், விதங்களிலும் குறும்படங்கள் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. அத்தகைய முயற்சிகளும் பாராட்டத்தக்கன. ஈழக்கலைஞர்களின் முயற்சிகள் மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தினாலும். இன்றுவரை ஈழத்தமிழன் இந்தியத் தமிழனின் படங்களைப்பார்ப்பதற்குத் திரையரங்குகளில் , அனுமதிச்சீட்டைப்பெற வரிசையில் நிற்கும் நிலை ஈழத்தமிழன் இன்னமும் குறும்படத்தைத் தயாரிக்கும் நிலையிலேயே இருக்கின்றான் என்பதை வெளிப்படையாகக் காட்டுகின்றது. இந்நிலை மாறவேண்டும், இந்தியச் சினிமாவைப்போலவே ஈழத்து சினிமாவும் வளரவேண்டும். இந்தியத் தமிழன்போல் இலங்கைத்தமிழனும் சினிமா உலகில் போற்றப்படவேண்டும். அனைத்து ஈழக்கலைஞர்களும் குறும்படங்களை விடுத்து முழுநீழக் கதைகளிலும் படங்களிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தித் தங்கள் படைப்புக்களை உலக அரங்குகளில் திரையிட முற்பட்டால் தமிழ்நாட்டின் தமிழ் சினிமாவைப்போல், தமிழர் தாயகத்தின் தமிழ் சினிமாவும் வானோங்கும்.

                                                   நல்வாழ்த்துக்கள்

0 comments:

Post a Comment