Friday, November 19, 2010 2 comments By: தென்றல் காற்று

காதலி(யி)ன் வலி(ரி)கள்




கல்லுரிக்காதால் கதையானது 
கண்ணீரில் காதல் சரித்திரமானது
என் ஊருக்கு நானோ தரித்திரம் ஆனேன்
நீ மட்டும் ஏன் என் இதயத்தில் சித்திரம் ஆனாய்
மரக்கமுடியவில்லை உன்னை
நான் உன்னை மட்டுமே காதலித்தேன் அதுதான் உண்மை

உன்னுடன் நடந்த கடல்கரை மணலில்
உனதும் எனதும் பெயரை எலுதிய மரங்களில்
நான் உனக்காக எலுதிய கடிதங்களில்
எந்த மாற்றமும் இல்லை
நீ மட்டும் ஏன் மாறிவிட்டாய்
உன் இதயத்தில் மட்டும் ஏன் இந்த மாற்றம்‌

உனக்காக நான் ஏறிய பேருந்துகள்
உனக்காக எனது இதயத்தை எலுத்தாக்கிய பேனாக்கள்
எலியின் பசிக்கு இரையாகிய நான் உனக்கு எலுதிய மடல்கள்
எல்லாவற்றையும் கேட்டுப்பார்
நான் உன்மேல் கொண்ட
காதல் நட்பு எல்லாவற்றையும் கூறும்
காதலில் எலுதிய கடிதங்கள் என் கண்ணீரில் மலர்கின்றன
உலகை மறந்து குழந்தைபோல் திரிந்தேன் உன்னால்
இப்போதும் உலகை மறந்தேன்
ஆனால் கிறுக்கன் போல் அலைகிறேன் அதுவும் உன்னால்தான்

என் காதல் எப்போது உனக்கு புரியும் அப்போது வா
அப்போதும் உனக்காக ஏதாவது
கிறுக்கிக்கொண்டே இருப்பேன்
                           தென்றல் காற்றுடன் உங்களைதீண்ட என்றும் உங்கள்
                                                         யோ.பவனீதரன்
Thursday, November 18, 2010 0 comments By: தென்றல் காற்று

ஆயுள்வேதம்

ஆயுள்வேதம் என்பது, இந்தியத் துணைக்கண்டத்துக்கு உரிய மரபுவழி மருத்துவ முறை ஆகும். இது இப்பகுதிக்கு வெளியில் உள்ள பல நாடுகளிலும் கூட ஒரு மாற்று மருத்துவ முறையாகப் பயன்பாட்டில் உள்ளது. ஆயுள்வேதம் என்னும் சொல் ஆயுர்வேத என்னும் சமசுக்கிருதச் சொல்லின் தமிழ் வடிவம் ஆகும். சமசுக்கிருதத்தில் ஆயுர் என்னும் சொல் நீண்ட வாழ்வு என்பதையும், வேத
              என்பது கல்வி தொடர்பானது அல்லது அறிவுத்துறை என்று பொருள்படக்கூடியது. எனவே ஆயும்வேதம் என்பது நீண்ட வாழ்வுக்கான அறிவுத்துறை என்ற பொருள் தருவது. நீண்டகால வரலாறு கொண்ட இம் மருத்துவ முறை தெற்காசிய நாடுகளில் மிகவும் செல்வாக்குப் பெற்ற ஒரு மருத்துவ முறை. இந்திய மருத்துவ நடைமுறைகள் குறித்த மிகப் பழைய நூல்கள் வேதகாலத்தில் தோன்றின. சுசுருத்த சங்கிதை, சரக சங்கிதை என்பன அக்காலத்துக்கு உரிய முக்கியமான மருத்துவ நூல்கள். தொடர்ந்து வந்த காலங்களில், ஆயுள்வேத மருத்துவர்கள், பல்வேறு நோய்களைக் குணமாக்குவதற்கான மருந்துகளையும், அறுவை மருத்துவ முறைகளையும் உருவாக்கியுள்ளனர்.
                                                                         
மேற்கத்திய மருத்துவத்தில், ஆயுள்வேதம் ஒரு ஈடுசெய் மருத்துவ முறையே அன்றி மேற்கத்திய முறையைப் பதிலீடு செய்யத்தக்க முறை அல்ல என்ற கருத்து நிலவுகிறது



                                                                                                    taken from wikipedia
Wednesday, November 17, 2010 1 comments By: தென்றல் காற்று

நமீதாவின் ரசிகர்களுக்கு

நமிதா (பி. மே 10, 1981), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ் மொழியில் மட்டுமன்றி கன்னடா, தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார். பெரிதும் கவர்ச்சியாக நடித்துப் புகழ்பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நமிதா (Namitha) 1981 ஆம் வருடம் மே மாதம் 10ஆம் தேதி குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்தார். அவரின் முழுப்பெயர் நமிதா கபூர். நமிதா 2001ஆம் ஆண்டு மிஸ்.இந்தியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்றார். அந்த போட்டியில் முதல் இடம் பெற்றவர் செலினா ஜெட்லி, மூன்றாம் இடம் பெற்றவர் த்ரிஷா. 'சொந்தம்' என்ற தெலுங்கு படத்தில் அவர் முதன்முதலாக நடித்தார். தமிழில் முதல் படம் 'எங்கள் அண்ணா'. எரிக் மேனிங் இயக்கிய 'மாயா' என்றஆங்கில படத்திலும் நமிதா நடித்துள்ளார். நமிதாவிற்கு நீச்சல் மற்றும் பேட்மிட்டன் விளையாட பிடிக்கும். அவர் சிறிது காலம் குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்துள்ளார். வெள்ளை ரோஜா அவரின் விருப்பமான மலர்
                                                                                                     taken from wikipedia
Wednesday, November 3, 2010 0 comments By: தென்றல் காற்று

ஆழிக்குமரன் ஆனந்தன்

ஆழிக்குமரன் ஆனந்தன் (வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) ஒரு நீச்சல் வீரர். பாக்கு நீரிணையை நீந்தி கடந்த வீரர் ஆவார். ஏழு உலகசாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர்[மேற்கோள் தேவை].
பாக்குநீரிணையை நீந்திக்கடந்த நீச்சல்வீரர் நவரத்தினசாமியின் ஆசியுடன் பாக்குநீரிணையை ஒரேதடவையில் நீந்திக்கடந்தார் ஆனந்தன். 1975இல் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி அங்கிருந்து மீண்டும் மன்னாரை நீந்திச் சாதனை படைத்தார். அப்போது வீரகேசரி ஆசிரியராக இருந்த எஸ். டி. சிவநாயகம் அவருக்கு ஆழிக்குமரன் என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தார்.
சிறுபிள்ளையிலேயே இவர் இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்டாலும், நீரில் மிதத்தல், மெதுநடை, தொடர்ந்து நடனம் என்று பல செயல்களில் சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார்[மேற்கோள் தேவை]. ஒர் ஈருந்து (மோட்டார் சைக்கிள்) தீநேர்ச்சியின் (விபத்தின்) விளைவால் இவரது மண்ணீரல் அகற்ற நேரிட்டது. ஆயினும் அவர் மனம் தளரவில்லை.
இதன் பின்னர் இவர் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்கத் திட்டமிட்டு இங்கிலாந்து சென்றார். குறுகிய பயிற்சியில் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்க முற்பட்டார். ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடந்தபோது குளிரால் பாதிக்கப்பட்டு சாதனை முயற்சியின் போதே மரணத்தையும் தழுவினார். குளிர்ந்த கடலே கவலை தருகிறது. அதற்கேற்ப என்னை தயார் செய்ய கால அவகாசம் போதவில்லை என்று தெரிவித்தார். இதுதான் அவர் இறக்கு முன்னர் கூறிய கடைசி வார்த்தை.
                                                                                         taken from wikipedia