சேயில் தாய் கொள்ளும் அன்பு
உயிர் உள்ளவரை உறவுகளின் மீதினில்
உறவுகள் கொள்ளும் அன்பு
பூக்கள் மீது தென்றல் கொள்ளும் அன்பு
கரை மீது அலை கொள்ளும் அன்பு
உலகிலே கோடி கோடி அன்பு எதுவாயினும்
ஜென்மங்களிலும் விலகமுடியாத என்றும்
மாறாத உன்னில் நான் கொண்ட அன்பு - அது
அன்பு அல்ல ஆருயிரே -என்
ஜீவன் கொண்ட காதல் என்னும் பொக்கிஷம்
தென்றல் காற்றுடன் உங்களை தீண்ட என்றும் உங்கள்
யோ. பவநீதரன்


