Wednesday, January 19, 2011 0 comments By: தென்றல் காற்று

அன்பு

                  
தாயில் சேய் கொள்ளும் அன்பு 
சேயில் தாய் கொள்ளும் அன்பு 
உயிர் உள்ளவரை உறவுகளின் மீதினில் 
உறவுகள் கொள்ளும் அன்பு 
பூக்கள் மீது தென்றல் கொள்ளும் அன்பு
கரை மீது அலை கொள்ளும் அன்பு 
உலகிலே கோடி கோடி அன்பு எதுவாயினும் 
ஜென்மங்களிலும் விலகமுடியாத என்றும்
மாறாத உன்னில் நான் கொண்ட அன்பு - அது
அன்பு அல்ல ஆருயிரே -என்
ஜீவன் கொண்ட காதல் என்னும் பொக்கிஷம் 
                   தென்றல் காற்றுடன் உங்களை தீண்ட என்றும் உங்கள்
                                                       யோ. பவநீதரன் 
Tuesday, January 18, 2011 0 comments By: தென்றல் காற்று

நினைவுகள்

உன்னுடன் பழகிய நாட்கள்
சிரிதுப்பேசிய நாட்கள்
இன்றுவரை என் நனைவில் வாழும்
 உன் சிரித்த முகம்
நீ எனக்கு அழைப்பு விடுத்த தொலைபேசியின் ஒலி
எதுவும் சொல்லவில்லை ஒரு  வார்த்தையில்
 நீ என்னை பிரிவாய் என்று
எதிர் பார்ப்புக்கள் நிறைந்த இந்த உலகில் உன்
 வருகைக்காய் மட்டும் எதிர்பார்த்துக்காத்திருக்கிறேன்
தென்றல் உள்ளவரை என் மூச்சு உள்ளவரை
என்றும் உன் நினைவில் நான்
                       தென்றல் காற்றுடன் உங்களை தீண்ட என்றும் உங்கள்
                                                                  யோ.பவநீதரன்
Saturday, January 15, 2011 1 comments By: தென்றல் காற்று

புன்னகை

மெதுவாக உன் கைகளை தழுவி
அலை வந்து முகம் காட்டும் கடல் கரையில்
கனவுகளின் மோதல்கள் நெஞ்சைதாக்க
இப்போதுதான் நடை பழகும் குழந்தை போல
உன்னுடன் நடந்தேன் கவலைகள் மறந்தேன்
தென்றல் வந்து முகம் துடைக்க
என் கண்கள் மெல்ல உனைப்பார்க்க
நீ புன்னகையால் என்னை தாக்கினாய்
அன்று தெரியவில்லை
அது தான் நீ எனக்கு வைத்தஆப்பு என்று!
                    தென்றல் காற்றுடன் உங்களை தீண்ட என்றும் உங்கள்
                                                                    யோ.பவநீதரன்