Friday, October 29, 2010 0 comments By: தென்றல் காற்று

உங்களுக்குத் தெரியுமா?


Inverted Jenny.jpg

நீர் தூய்மையாக்கம்

நீர் தூய்மையாக்கம் (Water purification) என்பது, நீரில் உள்ள மாசுக்களை அகற்றி, மனிதர்களின் குடிநீர்த் தேவைக்குப் பொருத்தமான அளவுக்கு அதனைத் தூய்மை ஆக்குவதையோ அல்லது தொழில் துறைத் தேவைகளுக்கு ஏற்ப அவற்றைத் தூய்மைப் படுத்துவதையோ குறிக்கும். நீரிலிருந்து அகற்றப்படவேண்டிய மாசுக்கள், ஒட்டுண்ணிகள், பக்டீரியாக்கள், அல்காக்கள், வைரசுகள், பங்கசுக்கள், கனிமங்கள் என்பவற்றை உள்ளடக்குகின்றன. இவற்றுட் சில உடல் நலத்துக்குக் கெடுதி விளைவிக்கக் கூடியவை. வேறு சில, சுவை, மணம், தோற்றம் போன்ற அம்சங்களில் நீரின் தரத்தைக் கூட்டுவதற்காக அகற்றப்படுகின்றன. தூய்மையாக்கத்தின் இறுதியில், சிறிதளவு தொற்று நீக்கி சேர்க்கப்படுவது வழக்கம். நீர் வழங்கல் வலையமைப்புக்களில் அது மீண்டும் மாசடையாமல் தடுப்பதே இதன் நோக்கமாகும்.
                                                                                                taken from wikipedia
Monday, October 25, 2010 1 comments By: தென்றல் காற்று

கடி ஜோக்ஸ்

என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்
மெஸேஜ் Forwardதான் பண்ண முடியும்,
Rewindலாம் பண்ண முடியாது.


T Nagar போனா டீ வாங்கலாம்.
ஆனால்
விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?


மா தவம் செஞ்சா இறைவனை அடையலாம்.
மாதவனாக முடியுமா?


வண்டி இல்லாமல் டயர் ஓடும்.
ஆனால்...
டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?


என்னதான் தீனி போட்டு நீ கோழி வளர்த்தாலும்,
முட்டைதான் போடும்.
நூத்துக்கு நூறெல்லாம் போடாது.


என்னதான் பெரிய
வீரனா இருந்தாலும்,
வெயில் அடிச்சா,
திருப்பி அடிக்க முடியாது.


பால் கொட்டினா வேற பால் வாங்கிக்கலாம்.
அரிசி கொட்டினா வேற அரிசி வாங்கிக்கலாம்.
ஆனால்!
ஆனால்!!
தேள் கொட்டினா வேற தேள் வாங்க முடியாது


வேர்கடலை வேர்ல இருந்து வரும்,
அதே மாதிரி
கொண்டைக்கடலை கொண்டையிலிருந்து வருமா?


என்னதான் நெருப்புக் கோழியா இருந்தாலும்,
அவிச்ச முட்டை போடாது.


இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.
சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா, ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?

ஆயுள் எதிர்பார்ப்பு




2005 ஆண்டுக்கான, உலகளாவிய மனிதர்களின் வாழ்நாள் எதிர்பார்ப்பு
ஆயுள் எதிர்பார்ப்பு அல்லது வாழ்நாள் எதிர்பார்ப்பு என்பது ஒரு மனிதரின் அல்லது உயிரினத்தின் சராசரி வாழும் காலத்தைக் குறிக்கும். பொருளியல் அல்லது மனித மேம்பாட்டு கருத்துச்சூழலில் ஒரு மனிதர் பிறந்ததில் இருந்து எவ்வளவு காலம் உயிர்வாழ்வார் என்ற எதிர்பார்ப்பை குறிக்கின்றது. குறிப்பாக ஒரு மனிதர் வசிக்கும் இடத்தை அல்லது நாட்டை முன்வைத்தும், ஆணா பெண்ணா என்ற வேறுபாட்டை முன்வைத்தும் இந்த அளவீடு மதிப்பீடு செய்யப்படுகின்றது. மனிதர்களின் சராசரி வாழ்நாள் (ஆயுள்) எதிர்பார்ப்பு சுவாசிலாந்தில் 32.6 இருந்து யப்பானில் 81 வரை இருக்கின்றது. பொருளாதார வளர்ச்சியில் சிறப்புற்ற நாடுகளில் வாழ்நாள் எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதை இயல்பாக அவதானிக்க முடியும்.

ஜோக்ஸ்

மனைவி: ஏன் இன்னிக்கு அலுவலகத்திலிருந்து சீக்கிரம் வந்துட்டீங்க?

கணவன்: இன்னிக்கு என் அலுவலகத்தில் ஒரு தவறு பண்ணிட்டேன். என் மேலாளர் "நரகத்திற்கு போய்த்தொலை" என்றார். அதனால்தான்???





என்ன சார் இது..? இந்த பத்திரிக்கை விலை இப்படி ஏறிக்கிட்டே போகுதே..?

நீங்கதான் எதுவும் வாங்கறது இல்லையே..? அப்புறம் ஏன் கவலைப்படறீங்க..?

அடுத்த வீட்டுக்காரன் ஒரு கஞ்சப் பயல்.. பொசுக்குன்னு எல்லா பத்திரிகையையும் நிறுத்தினாலும் நிறுத்திப்புடுவான்  





ஒரே குழப்பமா இருக்குடி..

எதுக்கு..?

குடும்பக் கட்டுப்பாடு செஞ்சுகிட்டா 500 ரூபாயாம்.. கர்ப்பிணி உதவித் தொகை 5000 ரூபாயாம்.. ரெண்டையும் எப்படி வாங்குறதுன்னுதான்..!
 

சிறிய கிரகத்தை ஆய்வு செய்து 7 ஆண்டுகளுக்குப் பின் திரும்பியது ஜப்பானிய விண்கலம்

பூமியிலிருந்து 30 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிறிய கிரகத்துக்கு அனுப்பப்பட்ட ஜப்பானிய “ஹயபுசா’ விண்கலம் ஏழாண்டுகளுக்கு பிறகு பூமிக்கு திரும்பியுள்ளது.
http://img.dinamalar.com/data/large/large_19226.jpgபூமியிலிருந்து 30 கோடி கிலோமீட்டர் தூரத்தில் “இட்டோகவா’ என்ற சிறிய கிரகம் உள்ளது. இந்த கிரகத்தை பற்றி ஆராய்ச்சி செய்ய “ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்புளோரேஷன் ஏஜென்சி’ கடந்த 2003ம் ஆண்டு மே மாதம் “ஹயபுசா” என்ற விண்கலத்தை அனுப்பியது. இட்டோகவா கிரகத்தில் உள்ள மண்ணையும் கல்லையும் கொண்டு ஆராய்ச்சி செய்வதன் மூலம் சூரிய குடும்பம் தோன்றிய விதத்தை கண்டறிய முடியும் என ஜப்பானிய விஞ்ஞானிகள் நம்பினர். இட்டோகவா கிரகத்திலிருந்து மண்ணையும், கல்லையும் சேகரித்துக் கொண்டு ஹயபுசா விண்கலம் நேற்று முன்தினம் பூமிக்கு திரும்பியது.
ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரத்தருகே உள்ள ஊமரா என்ற இடத்தில் தரையிறங்கிய ஹயபுசா விண்கலம், இட்டோகவா கிரகத்திலிருந்து 18 கிலோ மண்ணை உலோக உரைக்குள் (கேப்சூல்) பாதுகாப்பாக வைத்து எடுத்து வந்துள்ளது. பல்வேறு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹயபுசா விண்கலம் மூன்று ஆண்டு காலம் தாமதமாக பூமிக்குத் திரும்பியுள்ளது. ஹயபுசா கொண்டு வந்துள்ள இட்டோகவா கிரக மண் மாதிரி மூலம் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் சில உண்மைகள் தெரிய வரும் என ஜப்பானிய, ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

காதலா? நட்பா?

காலங்கள் சென்றால் காதல்கள் மாறலாம்
களங்கங்கள் வந்தாலும் நட்பு மாறாது
முதலில் நண்பர்களாகவே இருப்போம்  காலங்கள் தாண்டி
களங்கங்களை உடைத்து காதலும் நட்பும் கலந்த
ஒரு புதிய உறவு  படைப்போம்
Saturday, October 9, 2010 0 comments By: தென்றல் காற்று

அழகியே

நான் உன்போல் ஒரு அழகியைப் பார்த்ததில்லை 
என்று சொல்லமாட்டேன் பார்த்திருக்கலாம்
அனால் இனிமேல் உன்னை விட ஒரு அழகியை
காணமுடியாது