Monday, December 14, 2015 By: தென்றல் காற்று

புகை நமக்குப் பகை

பேதையா இருந்த மனிதன் என்றைக்கு போதை என்னும் ஒன்றைக் கண்டுபிடித்தானோ அன்றுதொட்டு அவன் அதற்கு அடிமையாகவே வாழ்ந்து வருகிறான். போதையைப் பல வகைகளிலும் பெற்றுக் கொள்ளும் வழிகளைக் கண்டுபிடித்துள்ளான் மனிதன். உலகில் உள்ள அனைத்து போதைப் பொருட்களிலும், போதை பெறும் வழிகளிலும் கொடுமையானது புகைப்பிடிப்பதே. ஏன் என்றால் மதுபானமும் இதர போதை வஸ்துக்களும் அதனைப் பயன்படுத்துபவனையும், உட்கொள்பவனையும் ஆட்கொண்டு அழிக்கின்றன. ஆனால் புகைப் பிடிப்பது, அதனைப் பயன்படுத்துபவனை மட்டுமல்லாது அப்புகையை சுவாசிக்கும் அனைவரையும் தாக்குகின்றது. பல ஆய்வுகளில், புகைப்பிடிப்பவர்களைவிட அப்புகையை சுவாசிப்பவர்களே (Passive smokers)  அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். எண்ணிப்பாருங்கள் சகோதரர்களே நாம் செய்யும் தவறு மற்றவர்களையும் பாதிக்கவேண்டுமா?. நாம் புகைப்பிடிப்பதற்காகச் செலவுசெய்யும் பணத்தை வைத்துப் படிக்க ஆசை இருந்தும் இன்று வரை பள்ளியையே கண்டிராத பிள்ளைகளைப் படிக்க வைக்கலாம். புகையற்ற தேசமும் உண்டாகும். எத்தனை சிறார்கள் சுவாசப் புற்றுநோயால் இறக்கின்றனர் அவர்கள் புகைப்பிடிப்பவர்களா? இல்லை, நாம் செய்த தவறுக்குத் தண்டனை அனுபவிப்பவர்கள். எண்ணிப் பாருங்கள் நண்பர்களே. புகை நமக்கு மட்டும் பகையல்ல அனைவருக்கும் பகை.
                                          நன்றி
   தென்றல் காற்றுடன் உங்களைத்தீண்ட என்றும் உங்கள்  பவநீதரன்.

0 comments:

Post a Comment